ஞாயிறு, 3 மார்ச், 2013

மனசுல பட்டது - 03/03/2013

வேலை பளு காரணமாக சில வாரங்கள் எழுத நேரமில்லை. இன்று ஞாயிறு , ஒய்வு நாள் கூடவே 5 மணிநேர மின்வெட்டும். சரி எழுதலாம் என உட்கார்ந்துவிட்டேன்.

வருண் குமார் : வார நாட்களில் என் மகன் வருண்குமாருடன் விளையாடுவதும் , பேசுவதும் இனிமையிலும் இனிமை. அவனுக்கு 1.5 வயதுதான். நாம் எது சொல்லிக் கொடுக்கிறோமோ அதைப் அப்படியே பிடித்துக்  கொள்கிறான். அவன் சொல்லும் தாத்தாஆ, ஆயா, குட்டி, பாப்பா, காய் எல்லாம் சூப்பர்.

உடல்நலம் : சீசனுக்கு ஏற்ற பழங்கள் உட்கொள்வது எனக்கு பிடித்தமான ஒரு பழக்கம். குறிப்பாக பனிக்காலத்தில் ஆரஞ்சு, திராட்சை மற்றும் வெள்ளரி.

வாழ்க்கை : நாம் என்னதான் எதிர்பார்த்து வாழ முயற்சித்தாலும், 100 சதவீதம் எதிர்பார்த்தது போன்ற வாழ்க்கை கிடைப்பது கடினம். ஆதலால் அட்ஜஸ்ட் செய்யும் மனப் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நல்லது : வாழ்க்கை வாழ்வதற்கே! வாழும் வரை வளமோடு வாழ்வோம்.!!

கருத்துகள் இல்லை: