வியாழன், 22 ஆகஸ்ட், 2013

அவசியத் தேவையாகிவிட்ட ஆங்கிலம்!

ஆங்கிலம்தான், அறிவின் அடையாளம் என்பது நடைமுறை நிஜம். எனவே, கல்வி அறிவுபெற படிக்க மட்டுமல்ல, கார்ப்பரேட் உலகில் ஜெயிக்க மட்டுமல்ல, எந்தத் துறையில் சிகரம் தொடவும், எழுதுவதிலும், பேசுவதிலும் ஆங்கிலத் திறமை அவசியம். 

பள்ளிக் கூடமே போகாத எத்தனையோ பேர் பிசினஸில் ஜெயித்திருக்கிறார்களே என்று கேட்கலாம். பிசினஸ் நடத்த ஆங்கிலப் புலமைத் தேவையில்லை. ஆனால், இன்றைய கல்வியில் படிப்பதற்கு ஆங்கிலத் தேர்ச்சி அவசியமாகிவிட்டது.

இன்ற இணையதளமும், மின்னஞ்சலும், பிசின¬ஸ் உலகமயமாக்கிவிட்டன. இதனால் உலகத்தில் உள்ள அனைத்து நாட்டினரும் ஆங்கிலத்தைக் கற்று வருகின்றனர்.

ஆங்கிலத்தைக் கண்டு பயப்படாதீர்கள். தினமும் நூல் நிலையம் செல்லவேண்டும். ஆங்கில நாளிதழ் படிக்கவேண்டும். ஐந்து புதிய வார்த்தைகளின் அர்த்தங்களை கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அதனை மனப்பாடம் செய்யவேண்டும்.

சுமாராக ஒரு வருடத்திற்கு 1,500 வார்த்தைகளைக் கற்க முடியும். ஐந்தே வருடங்களில் 7,500 வார்த்தைகளை கற்கலாம். இவ்வாறு கற்றுக்கொள்ளும்போது ஆங்கில ஞானம் பிரமாதமாக வளரும். இந்த டெக்னிக்கை பின்பற்றி ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் திறமையை வளர்த்தால் வாழ்க்கையில் கற்பனை செய்து பார்த்தேயிராத மாற்றங்கள் வரும் என்பது உண்மை.

தமிழை மறக்காதீர்கள். தமிழை மறப்பது தாயை மறப்பதற்கு சமம். ஆனால், மாறிவரும் உலகில் ஆங்கில அறிவு அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.


Nanayam Vikatan

கருத்துகள் இல்லை: