வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

தவறுகளைத் திருத்துவோம்!

பணம், காசு மட்டும் ஒரு மனிதனை மதிப்புமிக்கவனாக மாற்றிவிடாது. சுய ஒழுக்கமும் தேவை. நாம் செய்வதை யார் கவனிக்கப் போகிறார்கள் என உங்கள் வீட்டின் முன்னே ஒரு பேப்பரை சுருட்டிப் போட்டுப் பாருங்கள், மாலையில் வீட்டுக்கு நீங்கள் திரும்பி வரும்போது மாநகராட்சி குப்பை வண்டி உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கும். அந்த அளவுக்கு ஒருவரைப் பார்த்து ஒருவர் குப்பைகளை அதே இடத்தில் போட்டுச் சென்றிருப்பார்கள்.

நகர் முழுக்க அங்கங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் குப்பைகளைப் போடுவோம். காலையில் வீடு தேடிவரும் குப்பை சேகரிப்பவரிடம் குப்பைகளைக் கொட்டுவோம். அதைவிடுத்து தெருக்களிலும், வீட்டின் முன்பும் குப்பைகளைச் சேர்ப்பதால் நாமே வலிய சென்று நோய்களை வாங்கி மருத்துவத்துக்கு பணம் செலவழிப்பதை நிறுத்துவோம்!

கருத்துகள் இல்லை: