வியாழன், 24 ஜனவரி, 2013

மனசுல பட்டது - 24/01/2013

சினிமா: சமீபத்தில் அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பார்க்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. என்ன செய்வது, சில ஞாயிறு விடுமுறை பாடுபடுத்துகிறது. டிக்கேட் விலை ரூ.80. ஏற்கனவே இப்படத்தின் விளம்பரங்களைப் பார்த்தும், விமர்சனங்களை படித்தும்தான் பார்க்கச் சென்றேன். படம் ஆரம்பமே ரயில் சண்டைதான். காதுகிழிய சப்தம் வேறு. (DTS)

என்னைப் போன்ற சண்டை பிரியர்களுக்கு ஏற்ற படம்தான், ஆனால் ஒவர் பில்டப் உடம்புக்கு ஆகாது. அலெக்ஸ் பாண்டியன் அதற்கு உதாரணம். எப்படித்தான், இந்த மாதிரி படங்களை எடுக்கிறார்களோ. ஒரே ஆறுதல் சந்தானம், சிரிப்பு கூடவே உவ்வே. அர்த்த வார்த்தைகள். முழுக்க முழுக்க மொக்க படம்தான்.

அனுஷ்கா இருப்பதையே காட்ட வில்லை. பல இடங்களில் லாஜில் சுத்தமாகவே இல்லை. கார்த்தி இம்மாதிரி படங்களை தவிர்த்தால், அடுத்த படங்கள் சுமாராகவாவது ஓடும். இந்த மாதிரி, படங்களை கண்டிப்பாக, இந்திய தொலைக்காட்சிகளில் கூட பார்க்க விரும்ப வில்லை.

நாவல்: எழுத்தாளர் தமிழ்வாணன் நாவல்களை தற்போது படித்து கொண்டிருக்கிறேன். பாக்கெட் நாவல் உபயம். அட ஆச்சரியமாக இருக்கிறது, சுத்த தமிழில் அற்புதமாக எழுதி இருக்கிறார். 

புத்தக சந்தை :
'புத்தக சந்தை' விளம்பரங்கள் பார்க்க பார்க்க மனம் போக துடிக்கிறது. நேரமின்மையால் இந்த முறையும் போக முடியவில்லை. இந்த மாதிரி நிரந்தர புத்தக சந்தையை ஏற்படுத்தினால் எப்பவேண்டுமானாலும் போகலாம்.

வியாழன், 17 ஜனவரி, 2013

மனசுல பட்டது - 17/01/2013

பாலியல் வன்முறை : பாலியல் வன்கொடுமை என்ற சொல் தான் சரியானதாக இருக்கும். டெல்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நாளொரு வண்ணமாய் தினமூம் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் உள்ளது. இன்னமூம் அரசாங்கம் சரியான நடவடிக்கையை எடுக்காதது வருத்த மடையச் செய்கிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எல்லை பதற்றம் : தற்பொழுது, நம் எல்லையில் பாகிஸ்தானுடன் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கடுமையான வார்த்தைகளால் பிரதமர் அறிக்கை விட்டும் எதிர்கட்சிகள் விடுவதாய் இல்லை. தேவை கடுமையான நடவடிக்கை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பொங்கல் விடுமுறை : பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த பொங்கல் விடுமுறையால் கிடைத்தது. நிறைய பேசினோம். மனசுக்கு இதமாய் இருந்தது. நண்பன் முருகனின் சென்னை வாழ்க்கை பற்றி விரிவாக பேசினோம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கல்யாணம் - என்னுடைய மூன்றாமாண்டு கல்யாண நாள் நாளை (18/01/2013). கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இன்பம், துன்பம் என மாறி வருவது வாழ்க்கை. என் மகன் வருண் குமார் பிறந்து ஒன்றரை வருடம் ஆகிறது. இன்னும் வாழ மனசு ஆசைப்படுகிறது. இந்த  சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக, என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் பிள்ளைக்கு நல்ல தகப்பனாக வாழ வேண்டும்.

புதன், 16 ஜனவரி, 2013

பொங்கல் - 2012 நினைவலைகள்!

இம்முறை ஞாயிறு போகி வந்ததால், அழகாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. எங்கள் கிராமத்திற்கு (பெலாசூர்) சனி இரவே சென்றேன்.


போகி பொங்கல் - வீடு சுத்தப்படத்தப்பட்டது. மாலையில் எங்கள் குலசாமிக்கு பொங்கல் வைத்து, வீட்டில் வந்து படைத்து பொங்கல் சாப்பிட்டோம்.

பெரும் பொங்கல் - சூரியனுக்கு பூசணி இலையில் படையல் போடப்பட்டது.

மாட்டுப் பொங்கல் - வீட்டில் உள்ள மாடுகளை குளூப்பாட்டி, புது வர்ணம், புது கயிறு கட்டி படைத்தோம்.

காணும் பொங்கல் - அருகில் உள்ள மாரியம்மன் (சோத்துக்கன்னி) கோவிலில் திருவிழா கொண்டாட்டம்.

சனி, 12 ஜனவரி, 2013

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு, இன்று ஊருக்கு கிளம்ப தயாராகி கொண்டிருக்கிறேன். அனைவருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வெள்ளி, 4 ஜனவரி, 2013

நண்பர்கள் 2013

என்னுடன் ஆபிஸில் வேலை செய்யும் நண்பர்கள் (2013)... நிறைய புது முகங்கள்...


வியாழன், 3 ஜனவரி, 2013

லேசா பறக்குது மனசு மனசு

லேசா பறக்குது மனசு மனசு - வெண்ணிலா கபடி குழு, எனக்கு பிடித்த அருமையான பாடல்.


ஆண்: காதல் பிறக்கின்ற பருவம் பருவம்

மௌனம் புரிகின்ற தருணம் தருணம்

கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்

கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்


பெண்: லேசா பறக்குது மனசு மனசு

ஏதோ நடக்குது வயசு

லேசா நழுவுது கொலுசு கொலுசு

எங்கே விழுந்தது தெரியல


ஆண்: சுண்டெலி வலையில நெல்லப்போல்

நெல் பயருக்கூட சேர்க்குற

அல்லிப்பூ குளத்துல கல்லைப்போல்

உந்தன் கண்விழி தாக்கியே சுத்தி சுத்தி நின்னேன்


குழு: ரோஜப்பூவுக்கு மயக்கம் மயக்கம்

கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்

காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்

சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

(லேசா )

பெண்: தத்தித்தத்திப் போகும் பச்சைப்புள்ளப்போல

பொத்தி வச்சுதானே மனசு இருந்தது

திருவிழா கூட்டத்தில் கலைந்த சனமா


ஆண்: தொண்டைக்குழி தாண்டி காதல் வரவில்லை

என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது

பார்வைய பார்த்ததும் எதமா பதறுது

ராத்திரிப் பகலாதான் நெஞ்சுல

ராட்டினம் பறக்குதடி


பெண்: பூட்டின வீட்டுலதான் புதுசா

பட்டாம்பூச்சிப் பறக்குதடா

(ரோஜாப்பூ )

பெண் : லேசாப்பரக்குது மனசு மனசு

ஏதோ நடக்குது வயசுல


ஆண் : பூவா விரிகிற உலகம் உலகம்

தரிசா கெடந்தது இதுவரை


ஆண்: செத்தமரம் போல செத்த்க்கேடந்தேனே

ஒன்னப்பாத பின்னே உசுரு மொளைசது

சொந்தமா கிடைப்பியா

சாமிய கேட்பேன்


பெண் : ரட்டை ஜடை போட்டு துள்ளி திரின்செனே

ஒன்னப்பாத பின்னே வெட்கம் புரிஞ்செனே

ஒனக்குதான் ஒனக்குதான் பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல் மனசு காதலும் சுமக்குதடா


ஆண் : கனவுல நீ வருவா அதனால் கண்ணில் தூண்டுதடி