திங்கள், 29 ஏப்ரல், 2013

அம்மா


நம் வாழ்கையில் மறக்க முடியாத ஒருத்தியாக இருக்கிறாள் கருவுற்று இருக்கும் போதில் இருந்து நமக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதில் இருந்து அவளுடைய கவலைகள் ஆரம்பிக்கிறது....

பெற்று வளர்த்து 3 வயது ஆனவுடன் பள்ளிகூடத்தில் சேர்க்கவேண்டுமே என்ற கவலை..

13 வயதில் வயதுக்கு வந்து விடுவாள் என்ற கவலை ..

17 வயதில் collage ல சேர்க்கவேண்டுமே என்ற கவலை ...

21 வயதில் கல்யாணம் பண்ணி குடுக்கவேண்டுமே என்கிற கவலைஅப்படி அவள் கல்யாணம் வேண்டாம் வேலைக்கு போக போறேன் நு என்று சொன்னால் காலையில் இருந்து மாலை வரைக்கும் மகள் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுமே என்கிற கவலை ( இந்த பயம் தான் வயுத்துல நெருப்பு கட்டி கொண்டு இருப்பது) அன்று என் அம்மா சொன்னது ...

இன்று தான் அதை நான் உணர்கிறேன் ... பெண் குழந்தைகள் பிறந்தால் இவ்வளவு கஷ்டங்களா!!!

அதுவும் இப்போது இருக்கும் சூழ் நிலைமையில் எல்லா பெற்றோர்களும் மிகவும் பயப்பட வேண்டிய காலம் இது..... பெற்ற அம்மாவின் வலி இப்போது தான் எனக்கு புரிகிறது ....

எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் பொழுது .....


- Sumitha Subramanian.

கருத்துகள் இல்லை: