புளியை நெல்லிக்காய் அளவு எடுத்துக்குங்க. வெல்லம் ஒரு கைப்பிடி, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை அளவுல எடுத்துக்கலாம். புளியையும், வெல்லத்தையும் தண்ணியில கரைச்சி, வடிகட்டி அடுப்புல ஒரு கொதிவிட்டு இறக்கிடலாம். அடுத்து, ஏலக்காய்த்தூள், சுக்குத்தூளையும் தூவி விட்டு, நல்லா கலக்கினா... பானகம் தயார். கோடைக் காலம் மட்டுமில்லீங்க, மத்த நேரத்தலயும்கூட இந்தப் பானகத்தைக் குடிச்சி, உடம்பைத் தெம்பாக்கலாம்.
இந்தப் பானகத்தைக் குடிச்சா... தாகமும் அடங்கும். நீர்க்கடுப்பும் வராது.உடம்பும் உற்சாகமா இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக